எங்களை பற்றி

எதிர்கால திட்டங்களையும், வளர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு பிறருக்கு உதவும் எண்ணத்துடன் இறைவழிபாட்டுடனும், இறைத் தொண்டு செய்து நல்ல விடயங்களில் கவனம் செலுத்தி பாதயாத்திரை பக்தர்களுக்கு நலன் சார்ந்து அனைத்து உதவிகள் புரிந்து வளர்ச்சி பயணத்தில் இறைவன் அருளால் முன்னேறுவது நமது அறக்கட்டளையின் கடமையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில், திருச்செந்தூர் தைப்பூசம் திருவிழா முன்னிட்டு தைப்பூசத்திற்கு முந்தையநாள் பாதயாத்திரையாக செல்லுகின்ற பக்தர்களுக்கு, குரும்பூர், அங்கமங்கலம் பகுதியில் மருத்துவ முதல் உதவியுடன் அன்னதானம் வழங்குதல்.

Read more

ஆயிரம் யானை, குதிரைகளைப் பரிசாக கொடுத்தாலும்,   கோடி பசுக்களை தானம் செய்தாலும்,   எத்தனை தங்கம், வெள்ளி பாத்திரங்களை இனமாக கொடுத்தாலும்,   கடல்வரை உள்ள பரந்த பூமியைத் தானமாக அளித்தாலும் நமது குலத்தின் சேவைகளை அர்ப்பணித்தாலும்,   ஏன் கோடி கன்னிகளுக்கு விவாஹம் செய்து வைத்தாலும் அத்தனை எண்ணற்ற தானங்களும் அன்னதானத்திற்கு ஈடாகாது.   -   திருமூலர்

ஸ்ரீ கார்த்திகேயன் பக்தர் சேவா அறக்கட்டளையின் நோக்கம்

பாத யாத்திரை பக்தர்களின் நலன் சார்ந்து தன்னார்வ அமைப்பாக அனைத்து உதவிகளையும் வழங்குதல்

  • 1. ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில், திருச்செந்தூர் தைப்பூசம் திருவிழா முன்னிட்டு தைப்பூசத்திற்கு முந்தையநாள் பாதயாத்திரையாக செல்லுகின்ற பக்தர்களுக்கு, குரும்பூர், அங்கமங்கலம் பகுதியில் மருத்துவ முதல் உதவியுடன் அன்னதானம் வழங்குதல்.
  • 2. பாத யாத்திரை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய பூஜை மற்றும் இதர வி~யங்களை அவர்களுக்கு எடுத்துகூறுதல்.
  • 3. பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக செல்லவும், சாலை விதிகளை கடைபிடிக்கவும், விபத்துக்களை தவிர்க்கவும், தேவையான ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்குதல்.
  • 4. ஒவ்வொரு ஆண்டும் முருகனை வழிபடுவதால் ஏற்படும் பயன்களையும், நன்மைகளையும் எடுத்துக்கூறுதல்.
  • 5. பக்திபாடல்கள், முருகனின் அருட்செயல்கள் பற்றிய விளக்கங்கள் அடங்கிய புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்தல் போன்றவை.

நம் மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களையும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் கொண்டிருந்தால் நம் மனம் சிறந்து விளங்கும்.

வேலுண்டு வினையில்லை!
மயிலுண்டு பயமில்லை! முருகா சரணம்...